Times of Tamilnadu
Address: No. 236 & 238, Pudhu Nagar, Govindha Salai,
Opp. Water Tank,Near Mani Electronics, Puducherry-605001.
Phone: 04132191145
Mobile: 9943539775
![]() Founder & Editor | Dr. T.G. MANOHAR, B.Sc., M.A., (Journalisam),M.A., (Criminal & Police Science) L.L.B., M.L (Criminology)., Ph.D (Honorary)
Editor: Maalai Times (Online e-Paper -You Tube Channel) |
![]() News Editor | A. Haridass Arumugam News Editor: Times of Tamilnadu (Online e-Paper -You Tube Channel)
PRO: Puducherry Journalists Association |
- திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்.. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம் நடைபெற்றுவருவதை திருவாரூர் மாவட்ட கலெக்டர் வ.மோகனச்சந்திரன் நேரில் பார்வையிட்டு 10க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி நபர்களுக்கு தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்கள். தமிழ்நாடு அரசின் 2025-26 ஆம் ஆண்டின் சட்டமன்ற அறிவிப்பு எண்.33-ன்படி தமிழகத்தில் மருத்துவ வசதி குறைந்த, சிறப்பு மருத்துவ வசதிகள் குறைந்த… Read more: திருத்துறைப்பூண்டி தனியார் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” உயர்மருத்துவ சேவை முகாம்
- கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வுகரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு.. கரூர் கோடாங்கி பட்டியில் வருகின்ற செப்டம்பர் 17ஆம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவிருக்கும் திமுகவின் கழக முப்பெரும் விழாவிற்கான திடலையும், ஏற்பாடு பணிகள் நடைபெறும் இடங்களை வீட்டு வசதி துறை அமைச்சர் க.முத்துசாமி மற்றும் முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூர் மாவட்ட செயலாளருமான வி.செந்தில் பாலாஜி ஆகியோர் இணைந்து விழா ஏற்பாடுகளை மேற்பார்வையிட்டனர். இந்நிகழ்ச்சியில்… Read more: கரூரில் செப்டம்பர் 17ல் கழக முப்பெரும் விழா அமைச்சர் ஆய்வு
- கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம் கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் (UYIR) ஆகியவை இணைந்து, கோயம்புத்தூரின் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரமான ‘நான் உயிர் காவலன்’ -ஐ துவக்கின் இந்த பிரச்சாரத்தையும் அதன் அதிகாரப்பூர்வ இலச்சினையை கோவை மாவட்ட ஆட்சியர் திரு. பவன்குமார் ஜி. கிரியப்பனவர் அறிமுகம் செய்தார். அவருடன் கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன்,… Read more: கோயம்புத்தூரில் ‘நான் உயிர் காவலன்’ விழிப்புணர்வு பிரச்சாம்
- கமுதியில் ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம்கமுதியில் ஆசிரியர்கூட்டணி பொதுக்குழுகூட்டம் நடைபெற்றது ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழு கூட்டம் நடந்தது கூட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பணி ஓய்வு பெற்ற பெருமாள்குடும்பன்பட்டி ஆசிரியர் சுந்தர் ஆகியோருக்கு பாராட்டு விழாவும் . சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட ஏ.தரைக்குடி, இடையங்குளம் பள்ளி ஆசிரியைகளுக்கு பாராட்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றது.கூட்டத்தில் உறுப்பினர்கள் ஆசிரியைகள் அனைவரும் கலந்து கொண்டனர்
- நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்இராமநாதபுரம் மாவட்டம்,கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. கமுதி அருகே நீராவி கரிசல்குளத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில், ராமசாமிபட்டி,நீராவி, என்.கரிசல்குளம் எம்.எம். கோட்டை, மேலராமநதி, கே.எம். கோட்டை, ஆகிய ஊராட்சிகளுக்கு உட்பட்ட பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இம் முகாமிற்கு மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். வட்டாட்சியர்… Read more: நீராவி கரிசல்குளத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
- ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்பிரபல சுவிஸ் வாட்ச் தயாரிப்பு நிறுவனத்தின் ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் தனது புதிய கிளையை துவக்கியுள்ளது.இந்தியாவில் ஆறாவது கிளையாக துவங்கப்பட்டுள்ள ,இந்த கிளை,தனித்துவமான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில், 1000 சதுர அடி பரப்பளவில், பாரம்பரியம் மற்றும் நவீன வசதிகள் இணைந்த ஓர் அழகான அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது…. இந்தியாவில் முதன்முறையாக ஸ்பாட்லைட் மிரர் அனுபவத்துடன் ப்ரீட்லிங் பெண்களுக்கான பிரத்யேக வாட்ச் கலெக்சன் அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் நேரடியாக அணிந்து… Read more: ப்ரீட்லிங் பிராண்ட் வாட்ச் விற்பனை மையம் கோவையில் துவக்கம்
- கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழாகரூர் செய்தியாளர் மரியான் பாபு கரூரில் பாரதப் பிரதமர், விஸ்வகுரு நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழாவாக கொண்டாடுகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் தலைமையில் கரூர் வெண்ணமலை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவிலில் வீரவேல் கொடுத்து சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.தொடர்ந்து கரூர் அன்புக்கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் மாவட்ட தலைவர் V.V.செந்தில்நாதன் மதிய… Read more: கரூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சேவை இருவார விழா
- காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம்-நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம் – நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை ! மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்தாவது…. கடந்த இரு தினம் முன்பு திருச்செந்தூரில் இருந்து காயல் பட்டிணம் வழியாக தூத்துக்குடி செல்லும் தனியார் பேருந்தில் காயல் பட்டிணம் செல்வதற்காக் ஏறும் இஸ்லாமிய பெண்னை ஏறவிடாமல் தடுத்து நிறுத்திய நடத்துனரின் இத்தகை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வன்மையாக கண்டிக்கிறது. அனைத்து சமூக மக்களும்… Read more: காயல் ட்டிணம் தனியார் பேருந்து விவகாரம்-நிர்வாகத்திற்கு காயல் அப்பாஸ் எச்சரிக்கை !
- மாநில அளவிலான யோகா போட்டிநேஷனல் யோகா அஸோஸியேஷன் ஆப் இந்தியா மற்றும் யோகா பெடரேஷன் ஆப் ஆசியா அவர்கள் நடத்திய மாநில அளவிலான யோகா போட்டியில் கிரியேட்டிவ் சாம்ப்ஸ் பள்ளி,பொள்ளாச்சி,பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் தங்கம்,வெள்ளி,என 56 பதக்கங்களுடன் ஓவரால் சாம்பியன்ஷிப் பட்டம் வென்று அசத்தியுள்ளனர்.. மாநில அளவிலான யோகா போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட யோகா போட்டியாளர்களுக்கு மாநில அளவிலான யோகா சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் 50க்கும் மேற்பட்ட பள்ளியை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் கிரியேட்டிவ்… Read more: மாநில அளவிலான யோகா போட்டி
- (no title)காஞ்சிபுரம் மாவட்ட அம்மா பேரவை சார்பில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம் தலைமையில் செட்டி தெரு பகுதியில் மாவட்ட கழக செயலாளரும் , முன்னாள் அமைச்சருமான வி .சோமசுந்தரம் திமுக ஆட்சியின் அவலங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் விதமாகவும், வருகின்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க கழக சாதனைகளை விளக்கிபொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கினார் உடன் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், பொது குழு உறுப்பினர் ஒ.வி.ரமேஷ்,மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஆர்.டி. சேகர், மாவட்ட… Read more: (no title)
- பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்கரூர் செய்தியாளர் மரியான்பாபு பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்.. கரூர் மாவட்டத்தில் அன்புமணி ராமதாஸ் மேற்கொள்ள உள்ள நடைப்பயணம் நிகழ்ச்சிக்கு-10,000- பேரை திரட்ட முடிவு செய்வது குறித்து பாட்டாளி மக்கள் கட்சியின் கரூர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் கொங்கு பிரேம்நாத் மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நகர… Read more: பாட்டாளி மக்கள் கட்சி ஆலோசனைக் கூட்டம்
- கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ், ஏ வி ஆர் மருத்துவமனை ஆகிய இணைந்து நடத்திய கேலக்ஸி முகவர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஹோட்டல் டைமண்ட் ஹாலில் நடைபெற்றது. முகாமினை கேலக்ஸி ஹெல்த் இன்சூரன்ஸ் பொது மேலாளர் அபுசாலிஹ், திருச்சி மண்டல மேலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமை ஏற்று துவக்கி வைத்தார்கள்.கும்பகோணம் கிளை பிரிவு தலைவர் நவீன் வரவேற்றார். மருத்துவமனையின் மருத்துவர் சசி பிரியா முன்னிலை வகித்தார்.திருச்சி மண்டல பயிற்சியாளர் மனோஜ்குமார் முகவர்களுக்கு நிறுவனத்தின் சிறப்புகளை எடுத்துரைத்தார்.… Read more: கும்பகோணம் கேலக்ஸி ஹெல்த் நிறுவனம் சார்பில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்
- மாதவரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்செங்குன்றம் செய்தியாளர் சென்னை மாநகராட்சி சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் மாதவரம் மண்டலம் ,29 வார்டு .ஜி.என்.டி.சாலையில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியம் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் மையங்களுக்கு சென்று சிகிச்சைகளை குறித்து மருத்துவர்களிடம் கேட்டு அறிந்தார். அதனைத் தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டைதொழிலாளர் நலன் மற்றும்… Read more: மாதவரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்
- வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் வயதான முதியோர்களுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டத்தை துவக்கி வைத்தார் அதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அந்தந்த பகுதியில் உள்ள நியாய விலை கடை ஊழியர்கள் கடைகளுக்கு வர முடியாத வயதான முதியோர்களின் வீடுகளுக்கு சென்று நேரில் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணி இன்று தூத்துக்குடி… Read more: வீடுகள் தேடி சென்ற ரேஷன் பொருட்கள்
- இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட பணிகளில் முறைகேடுகளை தடுத்து நிறுத்திட வேண்டும். வேலை அட்டை உள்ள அனைவருக்கும் வேலை வழங்கிட வேண்டும்.சம்பள பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். சம்பளம் ரூ.336 ஐ முழுமையாக வழங்க வேண்டும். 100நாள் வேலையை 200நாட்களாகவும் சம்பளமாக 600 உயர்த்தி வழங்க வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி… Read more: இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக, பழனி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம்
- திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல்திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு மும்பையில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்று காலை திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பொன்மணிசித்ரா மற்றும் காவலர்கள் சோதனை மேற்கொண்ட போது முன்பதிவில்லா பெட்டியில் லக்கேஜ் வைக்கும் கேரியரில் கேட்பாரற்றுக் கிடந்த பேக்கை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது. ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
- அரியலூரில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்அரியலூர் மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகத் துறையினருக்காக ஒரு நாள் பயிலரங்கம் நடைபெற்றது. இந்த பயிலரங்கத்தை இந்திய அரசு தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில், சென்னை பத்திரிக்கை தகவல் துறையினர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர் அரியலூர் நகரில் அமைந்திருந்த தனியார் கூட்ட அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு ஊடகங்களில் பணியாற்றி வரும் செய்தியாளர்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். நிகழ்வில் தகவல் தொடர்பு துறையின் முக்கியத்துவம், செய்தியாளர்களின் பங்கு, ஊடக… Read more: அரியலூரில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்
- கொமாரபாளையத்தில் பாத்திமா பீவி தர்கா உருஸ் ஐம்பதாவது ஆண்டு விழாசத்தியமங்கலம் செப்.13 சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கொமாரபாளையம் பகுதியில் பாத்திமா பீபி தர்கா 50 ஆவது சந்தன உரூஸ் விழா அஹ்லே தக்கனி சுன்னத் ஜமாத் முன்னிலையில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இரவு 7 மணிக்கு சந்தன உ ரூஸ் நடைபெற்ற விழாவில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் பல் சமய நல்லுறவு மாநிலத் தலைவர் முகமது ரஃபி தமிழ்நாடு அரசு சிறுபான்மையினர் ஆணைய துணைத் தலைவர் இறையன் பன் குத்தூஸ் ஆகியோர் கலந்து கொண்டார்.… Read more: கொமாரபாளையத்தில் பாத்திமா பீவி தர்கா உருஸ் ஐம்பதாவது ஆண்டு விழா
- கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சிகோவை மன அழுத்தம் குறைவதற்கும், உடலை பேணிக் காப்பதற்கும் விளையாட்டு முக்கியம் – கோவையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு… கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து மேடையில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி, இன்றைக்கு தமிழகத்தில் விளையாட்டு ஒரு முக்கியமான அங்கமாக விளங்குகின்றது உடல் கட்டுடன் எதிர்பார்க்கும் மன அழுத்தம் குறைவதற்கும் உடலை… Read more: கோவையில் அதிமுக சார்பில் கிரிக்கெட் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி
- திராவிட மாடல் ஆட்சி தொடர பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்-குற்றாலத்தில் கனிமொழி எம்.பி. பேச்சுதிராவிட மாடல் ஆட்சி தொடர திமுக பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். குற்றாலத்தில் நடைபெற்ற திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. பேசினார் தென்காசி தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான திமுக பாக முகவர்கள் கூட்டம் குற்றாலத்தில் நடைபெற்றது. தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், துணை செயலாளர்கள் வழக்கறிஞர் க.கனிமொழி, தமிழ்செல்வன்,… Read more: திராவிட மாடல் ஆட்சி தொடர பாக முகவர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும்-குற்றாலத்தில் கனிமொழி எம்.பி. பேச்சு
- கடுமையான நிபந்தனைகள் விதித்த காவல்துறை – பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்: த.வெ.க தலைவர் விஜய்பொய்யான வாக்குறுதிகளைத் தந்து மக்களை ஏமாற்றி வரும் வெற்று விளம்பர மாடல் தி.மு.க. அரசின் மீதான நம்பிக்கையை மக்கள் முற்றிலும் இழந்து விட்டனர். தங்களுக்கென்றே உண்மையான தோழமை மற்றும் பாரபட்சமற்றத் தன்மையுடன் கூடிய ஓர் அரசு அமைய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மக்களின் மனமறிந்து அரசியல் களம் காணும் தமிழக வெற்றிக் கழகம், மக்களுக்காக ‘மனசாட்சி உள்ள மக்களாட்சி’யை அமைக்கும் உன்னத லட்சிய நோக்குடன் களமாடி வருகிறது.மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் “வாகை சூடும் வரலாறு திரும்புகிறது;… Read more: கடுமையான நிபந்தனைகள் விதித்த காவல்துறை – பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்: த.வெ.க தலைவர் விஜய்
- ஊதியூர் காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்புகாங்கேயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 ஊதியூர்காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு காங்கேயம், ஊதியூர் போலீஸ் இன்ஸ்பெக்டராக சரோஜா பொறுப்பேற்றுக் கொண்டார்.ஊதியூர் காவல் நிலையம் 1950ம் ஆண்டு துவக்கப்பட்டது. எஸ்.ஐ., நிலைய பொருப்பு அதிகாரியாக இருந்து வந்தார். இந்நிலையில் ஊதியூர் காவல் நிலையம் தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து கோவையில் மதுவிலக்கு இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சரேஜா ஊதியூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக மாற்றம் செய்யப்பட்டார். ஊதியர் காவல் நிலைய ஸ்டேசனில் பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாக பொறுப்பு ஏற்று… Read more: ஊதியூர் காவல் நிலையத்திற்கு முதல் பெண் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
- காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வுகாங்கயம் செய்தியாளர் பிரபுசெல்:9715328420 காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டப்பகுதியில் நேற்று காலை கல்குவாரிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே காங்கயம் பகுதியில் உள்ள கணபதிபாளையம் சிவன்மலை குட்ட பாளையம் கம்பளிப்பட்டி கீரனூர் ஆகிய பகுதிகளில் உள்ள கனிம இருப்பு கிடங்குகளில் பார்வையிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாழ்வில் உதவி இயக்குனர் கனிம வளம் பிரசாத் காணி வட்டாட்சியர் மோகன் மற்றும் துறை சார்ந்த… Read more: காங்கயத்தில் உள்ள கல்குவாரிகளில் மாவட்ட ஆட்சி தலைவர் ஆய்வு