புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சி மாதம்தோறும் 20-ஆம் தேதி நடைபெற்று வருகிறது. இந்நிகழ்விற்கு புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கலைமாமணி முனைவர் வி.முத்து தலைமையில் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்வினை தொடங்கி வைத்து திருவள்ளுவர் சிலைக்கு முன்பாக இந்நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்றனர்.

உடன் புதுவைத் தமிழ்ச் சங்கத் துணைத் தலைவர் ப.திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் பொறிஞர் மு.சுரேஷ்குமார், அ.சிவேந்திரன், கவிஞர் இர.ஆனந்தராசன், முனைவர் அருள்ராஜ், அய்யன்காளி மனோகர், செந்தில், சம்பத்நீசு, நூலகர் ராஜேந்திரன், ஜெயபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *