தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தெற்கு ஒன்றியம் குலயநேரி ஊராட்சி இரட்டை குளம் கிராமத்தைச் சார்ந்த அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் திமுக கிளைக் கழகச் செயலாளர் மாடசாமி ஏற்பாட்டில் இரட்டை குளம் நாட்டாமை முருகன் மற்றும் ஊராட்சி உறுப்பினர் மனோகரன் பிஜேபி தலைவர் ராஜ் என்ற லோகநாதன் ஆகியோர் தலைமையில் குமார், ஆறுமுகம், தேவேந்திரன், சமுத்திரம், வைரசாமி, ராம ராஜா, செல்வம், கணேசன், பிரசாத், தேவா, ராமச்சந்திரன், மயில் முருகன், ராமச்சந்திரன், வேலாயுதம் மற்றும் 25க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி திமுக அமைப்பு இணைச் செயலாளர் அன்பகம் கலை முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
நிகழ்ச்சியின் போது தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் மாவட்ட கழக செயலாளர் சிவ பத்மநாதன் ஆனைகுளம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கலில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திருமலை குமார் சுப்பையாபுரம் திருமலைக்கனி ஒன்றிய கவுன்சிலர் சங்கர் மாவட்ட பிரதிநிதி துரைப்பாண்டியன் மேல நீலிதநல்லூர் முன்னாள் வட்டார காங்கிரஸ் தலைவர் மாணிக்கம், ஹரிச்சந்திரன் இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஹரி கிருஷ்ணன் அசோக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்