திண்டுக்கல் மாவட்டம் பழனி வ உ சி மத்திய பேருந்து நிலைய நுழைவாயிலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக சமூக நீதித்துறை அமைச்சராக பொறுப்பேற்ற வன்னியரசுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கும் விதமாகவும் சமூக நீதித்துறை அமைச்சர் பதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் விசிக கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்நிகழ்வின் தலைமையாக மாவட்ட செயலாளர் போர்கொடியேந்தி முன்னிலையாக மாவட்ட பொருளாளர் துரை.முத்தரசு மாவட்ட செய்தி தொடர்பாளர் பிரபு தமிழ்த் தேசிய எழுச்சிப் பேரவை மாநில துணை செயலாளர் பொதினிவளவன் மாவட்ட துணை செயலாளர் அப்துல் கலாம் ஆசாத்
மாவட்ட துணை செயலாளர் விடுதலை காமராஜ் மற்றும் இந்நிகழ்வில் மாநில நிர்வாக குழு உறுப்பினர்கள் வடிவேல், மருதமுத்து இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட செயலாளர் ஜெயசீலன் வணிகரணி மாவட்ட அமைப்பாளர் ஹன்சிராம் மாவட்ட துணை அமைப்பாளர் செந்தமிழன் ஒன்றிய துணை செயலாளர் கோதை திருமாறன்,முரளிவளவன், குருநாதன், மணிகண்டன், ராஜசேதுபதி,ஆத்திமணி, வளவன்வாய்க்கால், விஷ்ணுவர்தன், அருண், முரளி, இராமகிருஷ்ணன், சுதாகர்,கார்த்திக்முத்து மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கட்சி கொடிகளை ஏந்தியவாறு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பல்வேறு கோஷங்களை எழுப்பி பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்..