திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூரில் கல்விசார் செயல்பாடுகளுக்காக மனிதம் அறக்கட்டளை தொடங்கப்பட்டது. அறக்கட்டளை நிறுவனர் வழக்கறிஞர் உதயசங்கர் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் கலாம் பவுண்டேசன் நிர்வாகி கேசவராஜ், வந்தை முன்னேற்ற சங்க தலைவர் வந்தை பிரேம், சமூக ஆர்வலர்கள் சதானந்தன், பத்மநாபன், காளிதாஸ் மண்ணிசை பாடகர் தென்னாங்கூர் ரஜினி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.