திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த எரமலூர் ஸ்ரீ சுந்தரவரத லக்ஷ்மி நாராயண பெருமாள் சன்னதியில் வசந்த உற்சவ வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த வைபவத்தில் மூல மூர்த்திகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு விசேஷ திருமஞ்சனம் நடந்தேறியது. பிறகு உற்சவ மூர்த்திகள் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.