தேனி மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்ட அரங்கில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்
தேனி மாவட்டம் தேனி நகரில் உள்ள தேனி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற அனைத்து அரசுத் துறை அலுவலர்களுடான ஆய்வுக் கூட்டத்தில் எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மாவட்ட கலெக்டர் இரா வைத்திநாதன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் சட்டமன்ற உறுப்பினர்கள் கம்பம் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா பெரியகுளம் க. சபரி ஐங்கரன் ஆகியோர் முன்னிலையில் 229 பயனாளிகளுக்கு 6 கோடியே 25. லட்சத்து 08.480மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட எஸ் பி சினஹேப்பரியா. நகர்மன்றத் தலைவர்கள் கம்பம் வனிதா நெப்போலியன் சின்னமனூர் அய்யம்மாள் ராமு போடிநாயக்கனூர் ராஜராஜேஸ்வரி சங்கர் தேனி ரேணு பிரியா பாலமுருகன் பெரியகுளம் சுமிதா சிவக்குமார் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் ஏ.எடிசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.