காயல் பட்டிணம் ஜீன் 16
இது குறித்து மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
திருவள்ளூர் மாவட்டம். கும்மிடிபூண்டி அருகே உள்ள சிப்கார்ட்டில் பணிபுரிந்து வந்த வட மாநிலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மூன்று வயது சிறுமியை பாலியல் வன்புனர்வு செய்து படு கொலை செய்ய பட்ட சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் இச்சபவத்தை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி மிகவும் வண்மையாக கண்டிக்கிறது. மேலும் தமிழகத்தில் சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதனால் பெண்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
உயிரிழந்த சிறுமியின் குடும்பதார்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்களையும் தெரிவித்து கொள்கிறோம். உயிரிழந்த சிறுமியின் குடும்பத்திற்கு ரூ 50 லட்சம் தமிழக அரசு வழங்க வேண்டும். சிறுமி பாலியல் மற்றும் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுத்து பினையில் கூட விடாமல் சாகும்வரை சிறைபடுத்துனால் மட்டுமே இது போன்று இவ்வுறக்கமின்றி மிகவும் கொடூரமான முறையில் பாலியல் குற்றங்களில் ஈடு பட நினைப்பவர்களுக்கும்ஒரு பாடமாக அமைய வேண்டும்.
எனவே : கொல்கத்தாவில்சோனா காட்சி மற்றும் மும்பையில் கிரன் சாலை போன்ற இடங்களில் அந்த அந்த அரசு அனுமதியோடு விபச்சார விடுதிகள் இயங்கி வருகின்றன. அந்த மாநிலங்களில் பாலியல் குற்ற சம்பவங்கள் மிகவும் குறைந்து உள்ளன. என்பது குறிப்பிட தக்கது. இது போன்று தமிழகத்தில் முக்கிய மாநகரங்களில் விபச்சார விடுதிகள் அரசு அனுமதியோடு இயங்கினால் மட்டுமே பாலியல் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்.
மேலும். தமிழகத்தில் இனிவரும் காலங்களில் இது போன்று பாலியல் குற்ற சம்பவங்கள் நடை பெறாம்ல் தடுக்க உரிய நடவடிக்கையை விரைந்து எடுக்க வேண்டும். சிறுமி . பெண்களின் பாதுகாப்பை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் உறுதி செய்ய வேண்டும்.என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் .இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.