சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு திருவாரூரில் பதஞ்சலி யோகா பேரவை சார்பில் 50க்கும் மேற்பட்டோர் யோகாசனம் செய்தனர் தொடர்ந்து திருவாரூர் தியாகராஜர் நான்கு வீதிகளில் பேரணியாக சென்று விழிப்புணர்வு நடைபெற்ற கழுகு பார்வை காட்சி வெளியானது
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது
இதன் தொடர்ச்சியாக திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள கௌரி சாமி நடுநிலைப்பள்ளியில் பதஞ்சலி யோகா பேரவை மாஸ்டர் இளங்கோவன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் யோகாசன நிகழ்ச்சியில் ஈடுபட்டனர் .
இதன் தொடர்ச்சியாக தெற்கு வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி கீழ வீதி வழியாக யோகாசனம் செய்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
இதன் கழுகு காட்சி வீடியோ தற்போது வெளியாகியது குறிப்பிடத்தக்கது