பிரபல நகைக்கடையான ஜோஸ் அலுக்காஸ் ஜுவல்லரி கோவை 100 அடி சாலையில் புத்தம்புதிய ஷோரூமை திறந்துள்ளது.
தற்போது திறக்கப்பட்டுள்ள ஷோரூமில் தங்கம், வைரம், பிளாட்டினம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளன.
இந்த திறப்பு விழாக் கொண்டாட்டங்களின் ஒரு அங்கமாக 40,000 ரூபாய்க்கு தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் வைர நகைகளுக்கு 20% மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு 7% தள்ளுபடி பெறலாம் எனவும் தெரிவிக்கப்படுள்ளது. தங்களது பழைய 22 காரட் தங்க நகைகளை மாற்றி BIS ஹால்மார்க் 918 தங்க நகைகள் அல்லது 1G சான்றிதழ் பெற்ற வைர நகைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசுகளும் வழங்கப்படுகிறது. மெட்டி, வெள்ளி கொலுசு மற்றும் அரைஞாண் கொடி போன்ற வெள்ளி நகைகள் வாங்கும்போது சேதாரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன் திருமணத்திற்கு வாங்கும் நகைகளுக்கு சிறப்புத் தள்ளுபடிகளும் உண்டென கூறப்பட்டுள்ளது. தங்கத்தின் விலை ஏற்றத்திலிருந்து பாதுகாத்து கொள்ளும் விதமாக முன்னதாகவே ‘புக்கிங்’ செய்யும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாதாமாதம் ஒரு சிறிய தொகையை ஒதுக்குவதன் மூலம், மாதாந்திர தங்க நகைத் திட்டத்தில் சேமித்து தூய தங்க நகைகளை வாங்கலாம் எனவும் இவற்றுக்கு கூடுதல் சிறப்புச் சலுகைகளும் உண்டென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாச் சலுகைகளை எல்லம் ஏப்ரல் 18 வரை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
ஜோஸ் அலுக்காஸ் ஷோருமில் உள்ள அனைத்து தங்க நகைகளும் BIS 916 ஹால்மார்க் முத்திரையிடப்பட்டது எனவும் வைரங்கள் உலகளாவிய ஆய்வக சான்றிதழ்களுடன் தகுதி பெற்றவை எனவும் 18 காரட் தங்க நகைகளின் தனித்துவமான கலெக்ஷன்களும் உள்ளதாகவும் இதன் விலை 4,999 முதல் ஆரம்பமாகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.