இதன் ஒரு பகுதியாக தமிழ் கலாச்சாரம், தூத்துக்குடி மக்களின் வாழ்வியல், கடல் வாழ் உயிரினங்கள், தூய்மை விழிப்புணர்வு ஆகிய கருத்துக்களை உள்ளடக்கிய ஓவியங்கள் வரையப்படுகின்றன.
பொதுமக்கள் அனைவரும்:
- பொது சுவர்களில் சுவரொட்டிகள் ஒட்டுவதை தவிர்க்கவும்
- நகர அழகுபடுத்தும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்கவும்
- சுவர் ஓவியங்களை சேதப்படுத்துவோர் குறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்கவும்
இப்பணிக்கு ஆதரவளிக்க விரும்பும் தன்னார்வலர்கள், பொதுமக்கள், கொடையாளர்கள் மற்றும் நிறுவனங்கள் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.