தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி,தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு தொடர்ந்து குற்றங்கள் பெருகிக்கொண்டு வருகிறது. பெண்களுக்கு, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், ஆணவக் கொலைகள், லாக்-அப் மரணங்கள் என்று சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு இருக்கக்கூடிய சூழலை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
அதிலும் இந்தக் குற்றங்களைச் செய்திருக்கக்கூடியவர்கள் தவெகவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது கவலையளிக்கிறது.சில நேரங்களில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது; பல நேரங்களில் நிர்வாகிகள் மீது குற்றம் பதிவு செய்யப்பட்டாலும்,அவர்களை நோக்கி விரல்கள் சுட்டிக்காட்டினாலும்,எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்பதை பார்த்துக்கொண்டிருக்குறோம்.அதனால் சட்டம் ஒழுங்கு மிகப்பெரிய கேள்விக்குறியாக தவெக ஆட்சியில் மாறியிருக்கிறது.
மாணிக்கம் தாகூர் அரசாங்கத்தை பற்றி பேசுகிறார் ஏனெனில் அவர்கள் அங்கம் வைக்கின்ற கூட்டணி ஆட்சி. ஆனால் சட்டமன்றமே ரீல்ஸாகத்தான் நடத்தப்படுகிறது என்ற உணர்வை தவெக அரசு உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.