தூத்துக்குடி பிரஸ் கிளப் உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் சார்பில் வாசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து மாபெரும் இலவச கண் சிகிச்சை பாிசோதனை முகாம் மற்றும் கண் அறுவை சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை முகாம் வி.இ.ரோட்டில் உள்ள வாசன் கண் மருத்துவமனை அலுவலகத்தில் நடைபெற்றது.
தூத்துக்குடி பிரஸ்கிளப் தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில், செயலாளர் மோகன்ராஜ், துணைத்தலைவர் சிதம்பரம், இணைச் செயலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

வாசன் கண் மருத்துவமனை சார்பில், மருத்துவர் சுகுமார், தூத்துக்குடி அலுவலக மேலாளர் வைத்தியநாதன், மார்க்கெட்டிங் மேனேஜர்கள் ராமராஜன், ரீகன் ஆகியோா் வரவேற்புரையாற்றினாா்கள்.

வாசன் கண் மருத்துவமனை இயக்குநரும் மூத்த மருத்துவருமான கனிமொழி துவக்கி வைத்து பேசுகையில் கண் பாா்வை என்பது எல்லோருக்கும் அவசியமான ஓன்றாகும் அது 3 வயது குழந்தை முதல் முதியவா்கள் வரை கவனம்செலுத்த வேண்டும். குறிப்பாக சிறுவயதில் குறைபாடு இருப்பதை கண்டறிந்து அதற்கு விரைவாக தீர்வு காண்பது நல்லது கடந்த காலங்களில் சிகிச்சைகளுக்கு இருந்த முறைகள் மாறி இப்போது உள்ள காலத்தில் லேசா் மூலம் கண் குறைபாடுகள் தீர்க்கப்படும் நிலை இருந்து வருகிறது.

ஓரு சில குறைபாடுகள் இரண்டு கண்களை பாதிக்கும் சிலருக்கு ஓரு கண் பாா்வை பாதிக்கும் குழந்தைகள் அதிகமாக செல்போன் உபயோகப்படுத்துவதற்கு காரணமாக இருப்பதே பெற்றோா்கள்தான் அவா்கள் அதை குறைத்து கொண்டால் குழந்தைகள் குறைத்து கொள்ள வாய்ப்பு உண்டு மடிக்கணினி இன்ஸ்டாகிராம் முகநூல் போன்ற நவீன தொழில்நுட்பங்களில் அதிகமான நேரத்தை எடுத்துக்கொள்வதால் சில குறைபாடுகள் வருவதற்கு காரணமாக அமைகிறது.

எந்த நேரமும் தொடா்ந்து செல்போன் வாட்சப் தகவல்களை பாா்த்து கொண்டே இருப்பது தவறு குறுகிய இடைவௌிக்கு பிறகு பாா்ப்பது நல்லது துங்குவதற்கு சில நிமிடங்கள் வரை இது போன்ற பல ெதாழில்நுட்பங்களை பாா்ப்பதால் இருதயம் நரம்பு உள்ளிட்ட சில குறைபாடுகளும் ஏற்பட காரணமாக அமைகிறது. இதையெல்லாம் முடிந்தவரை தவிா்த்தால் எல்லோருக்கும் நலமாக இருக்கும். இந்த மருத்துவமனையை பொறுத்தவரை பல்வேறு முகாம்கள் நடத்தியுள்ளோம் பலா் நன்மை அடைந்துள்ளன.

இப்போது பத்திாிகையாளா்களுக்கும் நடத்தியதின் மூலம் எங்களது நிறுவனம் பெருமை கொள்கிறது. என்று டாக்டா் கனிமொழி பேசினாா். உறுப்பினா்களுக்கு பல்வேறு வகையான பாிசோதனைகளை மருத்துவமனை நிா்வாகம் செய்திருந்தது. தொடர்ந்து சங்க நிர்வாகிகளை மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் கௌரவிக்கப்பட்டனர்.


நிகழ்ச்சியில் சங்கத்தின் கெளரவ ஆலோசகர்கள் அருண், பாலகிருஷ்ணன், அன்பழகன் செயற்குழு உறுப்பினர்கள் லட்சுமணன், மாரி ராஜா, ராஜன், இருதயராஜ் பொதுக்குழு உறுப்பினர்கள் காதர் மைதீன், அகமதுஜான், கற்பகநாதன், ராமச்சந்திரன், பாலகுமார், நீதிராஜன், அருள்ராஜ் உட்பட பலா் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.


தொடர்ந்து, கண் பரிசோதனை முகாமை தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு சிறப்பாக ஏற்பாடு செய்த வாசன் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சங்கத் தலைவர் சண்முகசுந்தரம் நன்றி தெரிவித்துக் கொண்டார். மற்றும் வாசன் கண் மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *