கல்பாக்கம் செப் 8
செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் வட்டம் நெற்குணப்பட்டு கிராமம் புனித தோமையார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா 5 ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது பள்ளி தாளாளர் சுஜி தலைமை தாங்கினார்
பள்ளி முதல்வர் ஜான்சி இராணி வரவேற்புரை நிகழ்த்தினார் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் மேள தாளங்கள் முழங்க மாணவ மாணவியர் மலர் தூவி வரவேற்பு அளித்தனர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்ற இதில் ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது விழாவில் மாணவர்கள் பெற்றோர் ஏராளமாக கலந்து கொண்டனர்