திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், பொது இடங்கள், முக்கிய சந்திப்புகளில் ஹிந்து அமைப்புகள், பொதுமக்கள், குடியிருப்பு நல சங்கங்கள் சார்பில் மொத்தம் 1,281 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன
விநாயகர் சதுர்த்தி விழாவை அமைதியாகவும், பாதுகாப்புடனும் நடத்தும் பொருட்டு, மாவட்டம் முழுவதும் 800 போலீசார் சிலை கண்காணிப்பு, பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர அந்தந்த போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட ரோந்து போலீசார் டூவீலர்களில் தொடர் ரோந்து சென்று கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் மாவட்டம் முழுவதும் நாளை செப்.,15 முதல் செப்.,20 வரை 6 நாட்கள் நடக்க உள்ளது.