தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, ராதாநகர், கிருஷ்ணமாச்சாரி தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்.
கட்டிட கலை நிபுணரான இவர் தீவிர விநாயகர் பக்தர் இவர் கடந்த 19 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயிரகணக்கான விநாயகர் சிலைகளை சேகரித்து பொதுமக்களுக்கு இலவசமாக கண்காட்சி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம், காந்தி தெருவிலுள்ள ஸ்ரீ லக்ஷ்மி ராம் கணேஷ் மஹாலில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகளுடன் கூடிய 20ம் ஆண்டு விநாயகர் கண்காட்சி துவங்கி, 24ம் தேதி வரை என 10 நாட்கள் நடைபெற உள்ளது.
இந்த கண்காட்சியை மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் த.சரத்குமார் ரிப்பன் வெட்டி, குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து பார்வையிட்டா விதவிதமான பிள்ளையார்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது ஊஞ்சலில் ஆடும் பிள்ளையார் பாட்டில் செல்லும் பிள்ளையார் சித்திக் கொண்டிருந்து பார்வையிடும் பிள்ளையார் பீரங்கி பிள்ளையார் என பல்வேறு வகைகளில் வடிவமைக்கப்பட்ட ஆசீர்வாதம் வழங்கும் பிள்ளை ஏராளமான பிள்ளையார் என 23 ஆயிரம் பிள்ளையார் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது இதனை அப்பகுதியை சார்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு வருகின்றனர்…