சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சேலம் மேற்கு மாவட்ட பாமக ராமதாஸ் அணியினர் தமிழகத்தில் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சேலம் மேற்கு மாவட்ட பாமக தலைவர் வக்கீல் கே வி. துரைராஜ் மாவட்ட பாமக செயலாளர் வி இ. ராஜேந்திரன் சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

இதில் வன்னியர்களுக்கு வேலைவாய்ப்பில் 10.5% சதவீத இட ஒதுக்கீடு மற்றும் தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாநில பொறுப்பாளர்கள் சண்முகம் வக்கீல் வைத்தியலிங்கம்மாவட்ட பொறுப்பாளர்கள் முருகன் தமிழ் நாதன் பழனிச்சாமி கௌதம கிருஷ்ணன் ராஜகணபதி மணிகண்டன் சிவநாதன் சண்முகம் மணி ரவி ராம் கமல் சுரேஷ் மேச்சேரி ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் சந்திரசேகரன் மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு செந்தில்குமார் வடக்கு பிரபாகரன் தெற்கு சதாசிவம் தலைவர் மணிவண்ணன் மேச்சேரி நகர செயலாளர் வள்ளூர் பிரஸ் தாமரைக்கண்ணன் மேட்டூர் நகர செயலாளர் சுகுமார் தலைவர் மாதையன் பிஎன்பட்டி நாகராஜன் மயில்சாமி கொளத்தூர் குமார் சக்திவேல் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி தலைவர் சித்தன் ஆறுமுகம் உள்ளிட்ட பாமக மாவட்ட ஒன்றிய கிராமக் கிளை நிர்வாகிகள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மேச்சேரி ஒன்றியத்தில் இருந்து இருந்து சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500 பேர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *