திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதியரசர் தண்டபாணி தலைமையில், திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதா முன்னிலையில் நடைபெற்றது
காசோலை, கல்வி, வங்கிக்கடன், மோட்டார் வாகன விபத்து, உரிமையியல், வருமானம், சொத்து வரி உட்பட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது இதில் மாவட்டம் முழுவதும் 14 அமர்வுகள் மூலம் 3159 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.இதன் மூலம் தீர்வுத்தொகையாக ரூ.12 கோடியே 53 லட்சத்து 98 ஆயிரத்து 183 வசூலிக்கப்பட்டது.