திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஶ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் நேற்று தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு ஹோமம்,கால பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். ஹோமம், அபிஷேக ஆராதனைகளை ஆலய அர்ச்சகர் ராஜகுரு, ஜெகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.