திருச்சி துவாக்குடியில் இருந்து திருவரம்பூர் நோக்கி அரசு பேருந்தில் சென்றுகொண்டிருந்த மாரியப்பன் என்பவரின் செல்போன் திடீரென மாயமானது. அருகில் இருந்தவர்களை விசாரித்தபோது இருவர் தப்பி ஓடினர். அவர்களைப் பிடித்து விசாரித்ததில், கம்பரசம்பேட்டை பகுதியைச் சேர்ந்த திவாகர் மற்றும் பிரபு ஆகியோர் செல்போனைத் திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்களைக் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மண்னை
க.மாரிமுத்து.