இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், தேசிய விவசாயிகள் தினம் கொண்டாடப்பட்டது.
இதில் இந்திய பொருளாதாரத்தில் விவசாயிகளின் பங்களிப்பு குறித்து மாணவ, மாணவிகள் அறிந்து கொள்ளும் விதமாகவும், மேலும் விவசாயிகளுக்கு இன்றைய நவீனமான விவசாய அறிவை வழங்குவதற்காகவும் தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவில்,பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டது.

இவ்விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் உதவிப்பேராசிரியை
சரண்யா வரவேற்று பேசினார்.கல்லூரியின் தலைவர் அகமதுயாசின் தலைமை தாங்கினார் மேலும் அவர் கூறும் போது பாரம்பரிய விவசாய முறைகளையும், சமூகங்களுக்கும், நிலத்திற்கும் இடையிலான நீடித்த உறவையும் அங்கீகரிப்பதற்கான ஒரு வாய்ப்பாக இவ்விழா அமைந்துள்ளதாக கூறினார். கல்லூரி முதல்வர் ராமர்
கூறும் போது,முன்னேற்றத்திற்காகவும் மற்றும் சமூக நலத்திற்காகவும் விவசாயிகள் ஆற்றும் முக்கியப் பங்களிப்புகள் குறித்து எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இராமநாதபுர மாவட்ட வேளாண் இணை இயக்குனர் பாஸ்கரமணியன் கூறும் போது, விவசாயச் சவால்கள் மற்றும் புதுமைகளைப் பற்றி அறிந்துகொள்ளவும், நிலையான விவசாயம் மற்றும் கிராமப்புற சமூகங்கள் மீது மரியாதையை வளர்த்துக் கொள்ளவும் மாணவ, மாணவிகளை வலியுறுத்தினார்.

மேலும் விவசாயிகளின் கடின உழைப்பைப் பாராட்டவும் சவுத்ரி சரண் சிங் போன்ற முக்கிய தலைவர்களுக்கு மரியாதை செலுத்துவதும் நினைவு கூறுவதே இவ்விழாவின் நோக்கம் என்பதையும் நினைவு கூறினார். இதன் தொடர்ச்சியாக வறண்ட நிலத்தில் நல்ல விவசாய நடைமுறைகள் (நெல்), இயற்கை வேளாண்மை, நெல்லில் விதை நேர்த்தி, நெல்லில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து மோனிகா நிவாஸ், சரண்யா, சீதாலட்சுமி, மஞ்சு மற்றும் தமிழ்செல்வன் ஆகியோர் தொழிநுட்ப சிறப்புரை யாற்றினர். நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் விவசாயிகளின் கடின உழைப்பு, மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பை பாராட்டி அவர்களை கௌரவிக்கும் விதமாக நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து விவசாய பெருமக்களுக்கும் மரக்கன்றுகள் மற்றும் இயற்கை உயிர் உரங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் நிறைவாக, பசுமைப் போர்வையில் நிலையான தாக்கத்தை உருவாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டதை தொடர்ந்து உதவி பேராசிரியர் ரஞ்சிதம் நன்றி கூறினார்.

இவ்விழாவில் பேரையூர் மற்றும் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *