கார்கில் போரின் 27 -ஆம் ஆண்டு வெற்றி தினத்தை முன்னிட்டு ஈகை உள்ளம் அறக்கட்டளை, சார்பாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாரத்தான் போட்டி ஹரிதா மஹால் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று கார்த்திக் வித்யாலயா பள்ளியில் அடைந்தது.
இது வெற்றி பெற்றவர்களுக்கு அறக்கட்டளை நிறுவனர் சூரியா, கார்த்திக் வித்யாலயா கல்வி நிறுவன தலைவர் கார்த்திகேயன் ,ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் தலைவர் மகாராஜா
உள்ளிட்ட பலர்பரிசுகளை வழங்கினார்.
இவ்விழாவில் ஈகை உள்ளம் அறக்கட்டளை பொருளாளர் நிர்வாக அறங்காவலர் வழக்கறிஞர் வீரராஜன், பொருளாளர் ரக்ஷணா, மற்றும்ரோட்டரி கிளப் ஆஃப் கும்பகோணம் ,செயலாளர் .கிருஷ்ணகுமார் மற்றும் சங்க உறுப்பினர்கள் விஜயலக்ஷ்மி மெட்டல் நிறுவனர் ராஜேந்திரன் கலந்து கொண்டனர்.