திருச்சி அரசு மருத்துவமனையில் புத்தாண்டு தினத்தில் 13 குழந்தைகள் பிறந்துள்ளன. நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி முதல் நேற்று மாலை வரை 8 ஆண் குழந்தைகளும், 5 பெண் குழந்தைகளும் பிறந்தன.
ஆங்கில புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அவர்கள் மருத்துவமனை ஊழியர்களுக்கு இனிப்பு கொடுத்து புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்த குழந்தைகள் இனி ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு அன்று தங்கள் பிறந்தநாளையும் கொண்டாடுவார்கள்.
மண்னை
க.மாரிமுத்து.