திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள விருப்பாச்சி புரம் டிஇஎல்சி அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளியில் மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் 2026 வருடத்தின் முதல் நாளான இன்று காலை பள்ளியின் நிர்வாகி Rev ஜேக்கப் ஜெயராஜ் அவர்கள் பள்ளிக்கு வருகை தந்து தேசிய கொடியை ஏற்றி வைத்து மாணவர்களுக்கு மூன்றாம் பருவத்திற்கான பாடநூல் மற்றும் குறிப்பேடுகள் வழங்கி மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார். நிகழ்வில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆர்.இன்பராஜ் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.