கோவையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாடு பல்சமய நல்லுறவு இயக்கம் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றது..இந்நிலையில் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக மனித நேயத்தை வலியுறுத்தும் வகையில் அண்ணல் காந்தி 75 ஆவது நினைவு நாளை முன்னிட்டு இந்திய கலாச்சார நட்புறவுக் கழகம் தமிழ்நாடு பல் சமய நல்லுறவு இயக்கம் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெரு மன்றம் ஆகியோர் இணைந்து மத நல்லிணக்க கருத்தரங்கம் கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள அண்ணாமலை ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. இந்திய கலாச்சார நட்புறவு கழகத்தின் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன்,வரவேற்புரை வழங்கிய இதில்,பல் சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகமது ரஃபி தலைமையுரையாற்றினார்.அப்போது பேசிய அவர், மத நல்லிணக்க பிரச்னைகளுக்கு தீர்வு காணவும்,மனித நேயத்திற்கும் காந்திய கொள்கைகள் எப்போதும் தேவைப்படுவதாக கூறினார்..கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக, தமிழக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டார்.முன்னதாக மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு மரியாதை செய்த அவர்,கருத்தரங்கில் சிறப்புரையாற்றினார்..அப்போது பேசிய அவர், காந்தியின் அணுகுமுறை முதல் இனப் பாகுபாட்டை எதிர்த்தல் வரையில் அவரது ஆளுமை குறித்து பேசினார்.மதங்களை கடந்து மனிதம் பேசும் மனிதநேயத்தை கொரோனா கால கட்டத்தில் அனைவரும் தெரிந்த கொண்டதாகவும்,கொரோனா கால கட்டத்திற்கு பிறகு மனிதநேயம் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டார்..
நிகழ்ச்சியில், பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கத் தலைவர் குணசேகரன் ,முன்னாள் மாவட்ட அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன், அனைத்து கிறிஸ்தவர் கூட்டமைப்பின் தலைவர் சகாயராஜ், பல் சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம் எம் ராமசாமி செயலாளர் சுப்பிரமணியம் இஸ்காப் மாநிலத் துணைத் தலைவர் சுப்பிரமணியன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சிவசாமி ,கோட்டை செல்லப்பா, ஜலாலுதீன் இம்தாதி, சாய் சாதிக், பாலசுப்ரமணியம், பூபேஷ், ராதாகிருஷ்ணன், புவனேஸ்வரி, மருத்துவர் வித்யாராஜன்,தோழர் ப.பா.ரமணி உட்பட தமிழ்நாடு பல் சமய இயக்கம் இஸ்காப் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற நிர்வாகிகள் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *