பாம்பன் ரயில் பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் இருந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் ஜனவரி 9 ம் தேதி வரை புறப்பட வேண்டிய ராமேஸ்வரம் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் வழி ரயில்கள்)
மற்றும் ஜனவரி 1 ம் தேதி முதல் ஜனவரி 10 ம் தேதி வரை ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய சென்னை எழும்பூர் விரைவு ரயில்கள் (மெயின் லைன், கார்ட் லைன் வழி ரயில்கள்) ராமேஸ்வரம் – மண்டபம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
ஜனவரி 1 ம் தேதி முதல் ஜனவரி 10 ம் தேதி வரை திருச்சி – ராமேஸ்வரம் – திருச்சி, மற்றும் அனைத்து மதுரை – ராமேஸ்வரம் – மதுரை விரைவு ரயில்கள் இரு மார்க்கத்திலும் ராமநாதபுரம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேபோல இதே காலத்தில்
அயோத்தியா, புவனேஸ்வர், ஹூப்ளி, செகந்திராபாத் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து ராமேஸ்வரத்திற்கு வருகை தரவேண்டிய வாராந்திர விரைவு ரயில்களும் ராமேஸ்வரம் – ராமநாதபுரம் ரயில் நிலையங்களுக்
கிடையே பகுதியாக ரத்து செய்யப் படுகிறது. இருந்தபோதிலும் ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியா, புவனேஸ்வர், ஹூப்ளி, செகந்திராபாத், கோயம்புத்தூர் செல்லும் வாராந்திர விரைவு ரயில்கள் மண்டபத்தில் இருந்து இயக்கப்படும். மற்ற வாராந்திர மற்றும் வாரம் மும்முறை சேவை ரயில்கள் மண்டபம் – ராமேஸ்வரம் இடையே பகுதியாக ரத்து செய்யப் பட்டுள்ளது என தெரிவிக்கப்
பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *