மதுராந்தகம்
செங்கல்பட்டு மாவட்டம்
மதுராந்தகம் அடுத்த
அச்சிறுப்பாக்கம் அருகே
உள்ள மின்னல் ஊராட்சியில்
பாரத பிரதமரின் ஆரோக்கிய யோஜனா தேசிய திட்டம்
அச்சிறுப்பாக்கம் புதிய சகாப்தம் அரிமா சங்கம் மற்றும் மின்னல்
ஏழை மாணவர்கள் நல சங்கம்,
காஞ்சிபுரம் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், பம்மல் சங்கரா
கண் மருத்துவமனை இணைந்து பொதுமக்களுக்கு மாபெரும் இலவச கண் பரிசோதனை கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நடத்தினர்.
இம்முகாமில் கண்புரை நோய் உள்ள ஏழை எளிய மக்களுக்கு உலகத் தரச்சான்றிதழ் பெற்ற பம்மல் சங்கரா கண் மருத்துவமனை விழி லென்ஸ் பொருத்தி அறுவை சிகிச்சை மற்றும் போக்குவரத்து தங்கும் வசதி உணவு உட்பட அனைத்தும் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் அச்சிறுப்பாக்கம் புதிய சகாப்தம் லயன்ஸ் சங்கம் சார்பில் 11-வது முறையாக 60 பயனாளிகள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
இந்நிகழ்வில் சாசன தலைவர்
பொறியாளர் லயன் பி.சக்திவேல்,
சாசன செயலாளர் லயன் ஆர்.சத்தியகுமார், ஆகியோர் தலைமைதாங்கினர்.
ஜி.எம்.டி லயன் பி.சதாசிவம்,
மண்டல தலைவர் லயன் கண்ணன்,
14வது வட்டார தலைவர்
வழக்கறிஞர் லயன் சீனிவாசன்,
13-வது வட்டார தலைவர் லயன்
அமுதம் ரமேஷ்,
அச்சிறுப்பாக்கம் கோயில்
நகர பொருளாளர் லயன் முருகன்,
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அச்சிறுப்பாக்கம்
புதிய சகாப்தம் பொருளாளர்
லயன் வி.கவியரசன்,
தகவல் தொழில்நுட்ப பிரிவு இயக்குனர் லயன் எஸ்.ராஜசேகர்,
மின்னல் ஏழை மாணவர்கள்
நல சங்க பொதுச் செயலாளர்
மின்னல் ஸ்ரீதர்,
அட்டாமா மருத்துவர் ஜாகீர்உசேன்,
உட்பட அரிமா
சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.