மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் புரட்சித் தலைவியின் 78 வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவின் பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க கழக தலைமை நிலைய செயலாளரும்,
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவும், கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி ஆலோசனையின் படி
கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சரும் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினருமான செ. தாமோதரன் முன்னிலையில் கிணத்துக்கடவு வடக்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக கிணத்துக்கடவு பேரூராட்சியில் புரட்சித் தலைவியின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது பொதுமக்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடப்பட்டது,
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் சத்தியசீலன்,மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் டி.லட்சுமணசிங்,நகர கழக செயலாளர் கே.என். மூர்த்தி,நகர துணை செயலாளர் பிரபு,மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் டி. லட்சுமணன்,
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி துணைச் செயலாளர் தங்கராஜ்,
சிங்கிளம்பாளையம் ரமேஷ்,பிரகதீஸ்வரன், ராதாகிருஷ்ணன், மகேஷ் குமார், லோகு, செந்தில்குமார், ஜெயக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்