மன்னார்குடி.,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தகைசசால் விருது மூத்த தலைவர் தோழர் ஆர் நல்லகண்ணு உடல் நலக்குறைவால் உயர்ந்துள்ளார் அவருக்கு நினைவு அஞ்சலி செலுத்து வகையில் தமிழக முழுவதும் அனைத்து அரசியல் கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அனைத்து அரசியல் கட்சி சார்பில் மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக கருப்பு பேட்ஜ் அணிந்து பேரணியாக சென்று தந்தை பெரியார் சிலை முன்பு வைக்கப்பட்டுள்ள போராளி தகைசால் விருது மறைந்த மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு அவரது திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்ச்சிகள் தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.