எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி சட்டமன்ற தொகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பாக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கழக செயலாளர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எதிர்கொள்வதற்காக பல்வேறு கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்தி வருகின்றனர் இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பாக சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் திருமண மண்டபத்தில் மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்றது .

தலைமை கழகத்தின் அறிவிப்பின்படி தேர்தல் எதிர் கொள்ள எவ்வாறு செயல்படுவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .மேலும் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மக்களின் நீண்ட கால கோரிக்கைகளை நிறைவேற்றி கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது .விரைவில் தேர்தல் வருவதை ஒட்டி மக்களிடம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட கருத்துகளை தமிழக வெற்றி கழக மாவட்ட கழக செயலாளர் குட்டி கோபி தெரிவித்தார் .

இந்நிகழ்ச்சியில் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சீர்காழி கிழக்கு மேற்கு கொள்ளிடம் கிழக்கு மேற்கு ஒன்றிய செயலாளர்கள் சீர்காழி நகர செயலாளர் உள்ளிட்ட தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *