தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
மஹா கும்பாபிஷேகப் பெருஞ்சாந்தி பொருவிழா.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டத்திற்குட்பட்ட இடையங்கினாற்று அருகே உள்ள கிழக்குபுதூர் கிராமத்தில் வழிகாட்டி விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயங்களில் மகா கும்பாபிஷேக விழா பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த சில நாட்களாக யாகசாலை பூஜைகள், வேத மந்திர ஓதல்கள், ஹோமங்கள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தீர்த்தக் குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, வேத ஆசார்யர்கள் மந்திர ஓதத்துடன் கலசங்களுக்கு புனித நீர் அபிஷேகம் செய்து, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இந்த விழாவில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து, அன்னதானம் பெற்றனர். ஆலயத் திருப்பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இவ்விழா சிறப்பாக நடைபெற்றது.
பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், விழா சிறப்பாகவும் அமைதியாகவும் நிறைவடைந்தது.