திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு வந்த கோயம்புத்தூரில் இருந்து நாகர்கோவில் வரை செல்லும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் திண்டுக்கல் ரயில்வே காவல் நிலையத்தை
சேர்ந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் மணிகண்டன் காவலர்கள் சக்திசண்முகம், மதன்ராஜ், லோகேஷ், இளையராஜா ஆகியோர் கொண்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முன்பதிவில்லா பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பேக்கை எடுத்து சோதனை செய்தபோது அதில் 6 கிலோ 100 கிராம் கஞ்சா இருந்தது அதனை பறிமுதல் செய்த போலீசார் மேற்படி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.