அரசுத் துறைகளின் சேவைகளை, மக்களின் இல்லங்களுக்கு அருகே சென்று வழங்கும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தின் கீழ் கோவையில் முகாம்கள் மாவட்ட மற்றும் மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
கோவை மாநகராட்சி, வடக்கு மண்டலம், வார்டு எண்.11 மற்றும் 21-க்குட்பட்ட மக்கள் பயனடையும் படி இந்த முகாம் இன்று (9.9.25) சரவணம்பட்டி, சத்தி சாலையில் அமைந்துள்ள குளோபஸ் நிலையத்தில் நடைபெற்றது.
வடக்கு மண்டலத்தலைவர் வே.கதிர்வேல், மாமன்ற உறுப்பினர்கள் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் பழனிசாமி (எ) சிரவை சிவா, உதவி ஆணையர் முத்துசாமி, உதவி செயற்பொறியாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் முகாமில் கலந்துகொண்டனர்.
கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளுக்கு உடனடி ஆணையினை வழங்கினர்.