துறையூர் திருச்சி மாவட்டம் துறையூர் ஸ்ரீ பாலாஜி திருமண மண்டபத்தில் நரசிங்கபுரம், சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சிகளுக்கு செப்டம்பர் 19ந் தேதி “உங்களுடன் ஸ்டாலின்” முகாம் நடைபெற்றது.
இம்முகாமை எம் எல் ஏ ஸ்டாலின் குமார் துவக்கி வைத்தார்.இதில்
இம்முகாமில் நரசிங்கபுரம் சிக்கத்தம்பூர் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.இதில் 15 அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இம்முகாமில் துறையூர் வட்டாட்சியர் சிவகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாந்தி, ரவிச்சந்திரன் தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், மண்டல துணை வட்டாட்சியர் கோவிந்தராஜ், வருவாய் ஆய்வாளர்கள் இளவரசி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோகிலா, துரைராஜ் ஆரம்ப சுகாதார அலுவலர் செந்தில்குமார், முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், ம.ஒ.செயலாளர் அண்ணாதுரை,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம், முன்னாள் சிக்கத்தம்பூர் ஊராட்சி தலைவர் சசிகலா கார்த்திக் நரசிங்கபுரம் கிளைச் செயலாளர் தளபதி கதிரேசன், முன்னாள் ஊராட்சி தலைவர் மகேஸ்வரன்,நரசிங்கபுரம் ஊராட்சி செயலர் ரெங்கநாதன், சிக்கத்தம்பூர் ஊராட்சி செயலர் மனோகரன், எல்ஐசி ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்