திருவாரூர்
திருவாரூர் ரயில் நிலையம் முன்பு திமுக சார்பில் நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் பங்கேற்றார்.
இதில் பிரதான கோரிக்கையாக ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக நாடு முழுவதும் சமையல் சிலிண்டர் விலை உயர்த்திய ஒன்றிய அரசை கண்டித்தும் சிலிண்டர் தட்டுப்பாட்டை உடனடியாக சரிசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ்,ஒன்றிய செயலாளர் தேவா மற்றும் கூட்டணி கட்சிகள் தேமுதிக,விசிக , சிபிஐ சிபிஎம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.