கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்டம் வெங்கமேட்டில் தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்க்கு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் கரூர் மாவட்ட பொதுச் செயலாளர் காமேஸ்வரன் தலைமை தாங்கினார் கட்சியின் கரூர் மாநகர செயலாளர் எம்.ராஜ்குமார் வரவேற்புரையாற்றினார்.இந்நிகழச்சியில் மகளிர் அணி தலைவி சித்ரா,கடவூர் ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியம், தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் வழக்கறிஞர் எம். சங்கிலி கலந்துகொண்டு கரூர் மாவட்ட தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் அலுவலகத்தினை திறந்து வைத்து பொதுமக்களுக்கும், கட்சியின் நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தனர்.