வெ.முருகேசன்- மாவட்ட செய்தியாளர், திண்டுக்கல்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட எல்லை பகுதியில் உள்ள அருகே பரளி புதூர் சோதனை சாவடியில்
திண்டுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான சரவணன், மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரவீன்குமார் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் ஆகியோர் முன்னிலையில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையான கூர்ந்தாய்வுக் குழுவினருக்கு வாகன பரிசோதனையின்போது கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிகள் குறித்து தக்க அறிவுரைகளை இரண்டு மாவட்ட தேர்தல் அலுவலர்களும் வழங்கினர்.