எல்.பி.ஜி கேஸ் தட்டுபாடு காரணமாக டைல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வரும் நாட்களில் டைல்ஸ் தட்டுபாடு எற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் கோவை டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் தலைவர் திரு சுரபி பங்கஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் பந்தையசாலையில் உள்ள சீமா அலுவலகத்தில் கோயமுத்தூர் டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் சுரபி பங்கஜ் அவர்கள், ஈரான் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எல்.பி.ஜி கேஸ் தட்டுபாட்டால் டைல்ஸ் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதனால் கூடிய விரைவில் டைல்ஸ் விலை 30 % வரை விலை ஏற்றத்திற்கஆன வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


எனவே அரசு எல்.பி.ஜி தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பேட்டி – சுரபி பங்கஜ் ,தலைவர் ,கோவை டைல்ஸ் டீலர்ஸ் சங்கம்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *