தூத்துக்குடியில் கலப்படம் செய்து விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்ட பால் பறிமுதல் செய்யப்பட்டன.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் ஆவின் நிறுவனம், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள், காவல்துறையினர், தொழிலாளர் நலத்துறை இணைந்து புதிய பேருந்து, நிலையம் பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வினியோகத்திற்காக கொண்டு செல்லப்படும் பாலை நிறுத்தி சோதனை செய்தனர்.தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மாரியப்பன்,தூத்துக்குடி மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் ஸ்டாலின், ராஜசேகர், தூத்துக்குடி ஆவின் பொது மேலாளர் ராஜா குமார், மத்திய காவல்துறையினர் உதவி ஆய்வாளர் கணேசன், வடிவேல் ராஜா, சுபா, தொழிலாளர் நலத்துறை உதவியாளர் வள்ளுவன் உள்ளிட்ட அலுவலர்கள் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து புதிய பேருந்து எல்லாம் பகுதியில் இருந்தும் விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்ட ஆவின் பால் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தனர் சோதனை என்பது பாலில் கலப்படம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது
தண்ணீர் மற்றும் மால்டோ டெக்ஸ்ன் கெமிக்கல் சேர்த்து புதிய பேருந்து நிலையம் அருகே நடத்தப்பட்ட சோதனையில் ஒரு வாகனத்தில் 600 லிட்டர் பாலும் பழைய பேருந்து நிலையம் அருகே ஒரு வாகனத்தில் 800 லிட்டர் பாலும் டு விவரம் பகுதியில் சுமார் 200 லிட்டர் பாலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த பால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இந்த பால் அழிகப்பட்டன.
இது குறித்து மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் டாக்டர் மாரியப்பன் தெரிவிக்கையில் பொதுமக்கள் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தக்கூடிய வகையில் பால் கலப்படம் செய்து விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும்.இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்படும் தூத்துக்குடி மட்டுமின்றி கோவில்பட்டி, திருச்செந்தூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விநியோகம் செய்யப்படும் பால் தொடர்ந்து சோதனை செய்யப்படும் என்று கூறினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *