திருச்சி ஏப்-03
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் உலக அளவில் விரிவு ,எதார்த்தம் குறித்த புதிய “எக்ஸ்ஆர் அண்ட் டிடி” (Eextended Reality XR +Digital Twin DT) என்ற புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தபட்டது.
வரும் காலங்களில் உலக அளவில் ஏ ஐ தொழில் நுட்பத்திற்கு உயர்வான, அதற்கு வலு சேர்க்கும் வகையில் நிறுவனங்களில் எக்ஸ் ஆர் அண்ட் டிடி தொழில்நுட்ப திறன்கள் கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகளில் தேவை மிக அதிகம். இன்றைய உலகில் நாம் பயன்படுத்தும் செயலிகள் நம்முடன் பேசுவதில்லை.
இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் போது செயலிகளுடன் நாம் நிகழ்கால தொடர்பில் இருப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் விரும்பும் அவதார பிம்பத்தை உங்கள் எதிரில் நேரடியாக உருவாக்கி அதனுடன் நேரடி தொடர்பை உருவாக்கும் வசதியை இந்த தொழில்நுட்பம் செய்து கொடுக்கிறது. வருங்காலத்தில் விவசாயம் முதல் வரலாறு வரை இந்த எக்ஸ் ஆர் அண்ட் டிடி தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து எம்இஎஸ்சி என்றழைக்கப்படும் மத்திய திறன் மேம்பாட்டு கழகத்தின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு திறன் கழக மூத்த ஆலோசகர் சசிகுமார் சதாசிவம், கடந்த ஒரு மாத காலமாக புத்தனாம்பட்டி நேரு நினைவுக் கல்லூரியில் மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து பேசிய நேரு நினைவுக் கல்லூரி தலைவர் பொன் பாலசுப்பிரமணியன்,இந்த தொழில்நுட்பம் குறித்த கொள்கை அறிவிப்பை தமிழக அரசு கடந்த மார்ச் 12ஆம் தேதி அறிவித்துள்ளதாகவும், தற்போது உலக அளவில் நமது கல்லூரியில் முதல் முதலாக இந்த தொழில்நுட்பம் ஆறு மாத பாடப் பிரிவாக தொடங்கப்பட உள்ளதாகவும் கூறினார்.இதில் கலை மற்றும் அறிவியல் பயிலும் அனைத்து கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம் என கூறினார். உலக அளவில் முதல்முறையாக எக்ஸ் ஆர் அண்ட் டிடி தொழில் நுட்பம் தமிழகத்தில் புத்தனாம்பட்டியில் உள்ள நேரு நினைவுக் கல்லூரியில் தொடங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்