திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் அன்பில் மகேஷ், தனது தொகுதிக்குட்பட்ட வாழவந்தான் கோட்டை, குங்குமபுரம், தேவராயநேரி பகுதிகளில் நேற்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு அவருக்கு பொதுமக்கள் மலர் தூவி வரவேற்பு அளித்தனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தொகுதிக்கு செய்த சாதனைகளையும், முதல்வரின் தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க அவர் கேட்டுக்கொண்டார்.
மண்னை
க.மாரிமுத்து.