தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் தேர்தல் பறக்கும் படையினர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ 70- ஆயிரம் ரொக்க பணத்தை பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் – உடுமலை சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஆல்டோ மாருதி காரை சோதனை செய்தனர் நெடுஞ்சாலை துறை அதிகாரி அழகுராஜா உரிய ஆவணம் இன்றி ரூ.70- ஆயிரம் பணம் கொண்டு வந்துள்ளார்.
விசாரணையில் கட்டுமான பணிகளுக்காக பணத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது.
மேலும் போலீசார் விசாரணையில் நெடுஞ்சாலை துறை அதிகாரி அழகுராஜா முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார் ஆகையால் தேர்தல் அதிகாரிகள் சந்தேகப்பட்டதால் விசாரித்ததால். ஆவணங்கள் இன்றி எடுத்து வந்த
ரூ 70- ஆயிரம் ரொக்க பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.. அதிகாரிகள் பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.