கோவை மாவட்டம் வால்பாறை நகரம் மேற்கு பகுதி 15 வது வார்டுக்குட்பட்ட நல்ல காத்து எஸ்டேட் பகுதியில் தமிழ்நாடு தேயிலைத் தோட்ட பிரிவு மாநில தலைவர் வால்பாறை வீ. அமீது தலைமையில் வால்பாறை சட்டமன்ற தொகுதியின் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வெற்றி வேட்பாளர் . டி. லட்சுமண சிங்கிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்
இந் நிகழ்ச்சியில் வால்பாறை நகர அவைத்தலைவர் சுடர், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் நரசப்பன், நகர முன்னாள் இளைஞர் அணி செயலாளர் மிச்சர் கடை முருகன், 17 வது வார்டு கவுன்சிலர் மணிகண்டன், நகர எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் சாய் கிருஷ்ணா, நகர அம்மா பேரவை இணைச்செயலாளர் ராஜமாணிக்கம், மாணவரணி செயலாளர் லோகேஸ்வரன், மாணவரணி தலைவர் கருணாகரன், நகர இலக்கிய அணி செயலாளர் பெரியசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்