V, செந்தில்குமார் செய்தியாளர் திருவாரூர்
திருவாரூர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர்களுக்கு,
மறுமலர்ச்சி திமுகவின் பொதுச் செயலாளர் வைகோ தீவிரவாக்கு சேகரித்தார், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், நாச்சியார்கோவில், என்று பம்பரமாய் சுழன்று சுழன்று அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி வாக்காளரிடம் பிரச்சாரம் மேற்கொண்டார்,
முன்னதாக நாகையில் பேசும்பொழுது பள்ளிவாசலில் பாங்கு ஓதப்பட்டதால் அது முடியும் வரை காத்திருந்து பின்பு பிரச்சாரத்தை மேற்கொண்டார்,
வரும் வழி எங்கிலும் சாலை இருபுறத்திலும் நின்று பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் உள்ள அனைத்து கட்சி பொறுப்பாளர்களும் மாவட்டச் செயலாளர்களும் பங்கு பெற்று சிறப்பித்தனர்,