தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா மற்றும் திருச்செந்தூர் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் முன்னெடுப்பில் ஹைடெக் கட்டுப்பாட்டு அறை நிறுவப்பட்டது.

இந்த ஹைடெக் கட்டுப்பாட்டு அறையில் பல்வேறு மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. குறிப்பாக காணாமல் போன குழந்தைகளை மீட்பதற்கா project Guardian எனும் செயலி மற்றும் நிகழ்நேர வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் போக்குவரத்தை நேரடியாக கண்காணித்தல் (Real- time Traffic and Parking Monitoring), பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேவைகளை அறிந்து கொள்வதற்காக Copbot” AI எனும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது.

மேற்படி ஹைடெக் கட்டுப்பாட்டு அறை உருவாக்க உதவிய நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரி, பண்ணாரி அம்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி ஆகிய கல்லூரிகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை நேற்று (10.11.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *