அரியலூர் மாவட்ட செய்தியாளர் கே.வி முகமது:
அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடந்தது இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அரியலூர் மாவட்ட கிளையின் சார்பில் செந்துறை ஒன்றியத்தில் நடந்தது போதைப்பொருள் நுகர்வு தடுப்பு மற்றும் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது அரியலூர் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் ஆ சண்முகம் அனைவரையும் வரவேற்றுப் பேசினார்
வட்டாட்சியர் வேலுமணி கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார் செந்துறை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகன் காவல் ஆய்வாளர் குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் காவல் உதவி ஆய்வாளர் தேவேந்திரன் தங்கமணி செந்துறை வருவாய் ஆய்வாளர் சித்ரா கிராம நிர்வாக அலுவலர் அம்பிகா உட்பட ஏராளமானோர் பேரணியில் கலந்து கொண்டனர் மாவட்ட கன்வினர் சிவசங்கர் விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினார்
துணை புறவளர் சகானாகாமராஜ் ஆயுல் உறுப்பினர் சடையப்பன் ஆகியோர் பேரணியில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டனர் விழிப்புணர்வு பேரணி செந்துறை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தொடங்கி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது
இப்பேரணியில் நியமன துணைத் தலைவர் அட்வகேட் செல்வராஜ் நிர்வாக குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி துணை புறவளர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் ஆயுள் உறுப்பினர்கள் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி குழு உறுப்பினர்கள் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளி வெற்றி விநாயகா மேல்நிலைப்பள்ளி புனித தெரசா மேல்நிலைப்பள்ளி ஜூனியர் ரெட் கிராஸ் அமைப்பின் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வலர்கள் பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர் விழிப்புணர் பேரணி ரெட் கிராஸ் அமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சிவமூர்த்தி மோகன்ராஜ் மோகன்பாரதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்