கரூர் செய்தியாளர் மரியான் பாபு
கரூர் மாவட்ட திமுக மாவட்டசெயலாளரும்,மேற்கு மண்டல பொறுப்பாளருமான வி.செந்தில் பாலாஜி தலைமையில் கரூர் கலைஞர் அறிவாலயம் முன்பு கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா நகலை எரித்தும், கோஷங்கள் எழுப்பியும் தங்களது வன்மையான கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கரூர் திமுக வேட்பாளர் தியாகராஜன், கிருஷ்ணராயபுரம் திமுக வேட்பாளர் சி.கே.ராஜா,மண்டல குழு தலைவர்கள் எஸ்.பி.கணகராஜ், ஆர்.எஸ்.ராஜா,மாநில செயற்குழு உறுப்பினர் காலனிசெந்தில்,தெற்கு நகர செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி மற்றும் மாவட்ட,மாநில, நகர திமுக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.