கூவத்தூர் வாக்குசாவடிகளை புரட்சி பாரதம் கட்சி பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் பார்வையிட்டார்
கல்பாக்கம் நேற்று மாநிலம் முழுவதும் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற்றது செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் சட்டமன்றத் தொகுதிக்குப்பட்ட கூவத்தூர் கிராமத்தில் காலை வாக்கு பதிவு தொடங்கிய நேரத்தில் இருந்தே பொது மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்
அனைத்துக் கட்சியினரும் வாக்காளர்கள் வருகை பதிவு இவற்றை கவனித்து வந்தனர் இந்நிலையில் கூவத்தூர் கிராமம் கீழார்க் கொல்லை பகுதி வாக்குச் சாவடிக்கு காலை 11 மணியளவில் அதிமுக கூட்டணியைச் சேர்ந்த புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் கே.பி சகாதேவன் நேரில் சென்று வாக்குப் பதிவு நிலவரத்தை க் கண்டறிந்தார்