பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே எஸ் மூர்த்தி அவரது சொந்த கிராமமான பரமத்திவேலூரை அடுத்துள்ள கொத்தமங்கலம் அரசு நடுநிலைப் பள்ளியில் மகன் லோகேஷ்ராஜா உடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
நாமக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள பரமத்திவேலூர் திருச்செங்கோடு குமாரபாளையம், மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நாமக்கல், சேந்தமங்கலம், ராசிபுரம் ஆகிய ஆறு தொகுதிகளிலும் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் அமோகச் வெற்றி பெறுவார்கள் என தெரிவித்துள்ளார்.