தஞ்சாவூர் கரந்தை சத்யநாராயண சித்தர் ஆசிரமத்தில் மாதந்தோறும் நடைபெறும் ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச்சி ஆயில்ய வழிபாட்டு குழு தலைவர் யோகம் செழியன் தலைமையில் நடைபெற்றது விழாவில் திருபுவனம் ஆதிசக்தி பீடம் நிறுவனர் அருள் திரு கண்ணன் அடிகள் ஆசி உரை வழங்கினார்.கண் மருத்துவர் சிவ விக்னேஷ் முன்னிலை உரை நிகழ்த்தினார் விழாவில் திருமதி சுந்தரி செழியன் ,கோவை பால ரிஷி பீடம் நிறுவனர் பாலரிஷி மற்றும் மதுக்கூர் ராஜ சேகர்சித்தர் கண்ணன் அடிகள் ஆகியோரோடு தனக்கு ஏற்பட்ட அனுபவ பதிவுகளை உரை நிகழ்த்தினார்
விழாவில் தென்னங்குடி சண்முகசுந்தரம் ஆண்டிமடம் ரேவதி சத்யநாராயணன் பேராசிரியர் கஸ்தூரி நாகராஜன் விமலா ராமதாஸ் புருஷோத்தமன் மதுரை கோவிந்த ராம் இயக்குனர் மணிவாசகன் திருவேதுகுடி பாலதுரை அரசன் திருவையாறு கலைச்செல்வன் சுப்பிரமணியம் வடுவூர் மணிபாலா வழக்கறிஞர் சுந்தர் ஆசிரியர்கள் புடிச்சக்காரி செல்வராஜ் அமர்நாத் பழபிரகதீஸ் பேராசிரியர் பாலகிருஷ்ணன் புவனேஷ் மற்றும் ஆன்மீக பெருமக்கள் கலந்து கொண்டனர்
விழாவினை திருச்சி வானொலி நிலைய செய்தி வாசிப்பாளர் திருமதி ஜெய் கீதாஅவர்கள் தொகுத்து வழங்கினார் நிறைவில் ஆயில்ய வழிபாட்டுக் குழு செயலாளர் கவிஞர் ராகவ் மகேஷ் நன்றி கூறினார்